Wednesday 30 October 2019

கரையான் எனும் காப்பாளன்...





 நாம் வாழும் இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா?

எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும்,  நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன. நமக்காக வேலை செய்யும் அந்த அழகான உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா....

  எறும்புகள் எனும் எந்திரன்

அளவில் மிகச் சிறிய உயிர்தான், ஆனால் மிகச் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்கும்.  'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட எறும்புகள்தான், இந்த மண்ணில் இருக்கும் எந்தவொரு பொருளையும் சிதைத்து மண்ணோடு கலந்து மண்ணை வளமாக்குகின்றன. இவை ஏற்படுத்தும் துளைகளால் காற்றும் நீரும் மண்ணுக்குள் சென்று, அவற்றிற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து   மண்ணின் வளத்தைக் கூட்டுகின்றன. விவசாயத்தின் இன்னொரு நண்பன் இந்த எறும்புதான். எறும்புகள் இருந்தால் உரங்களே தேவையில்லை. தண்ணீர் இல்லாத சமயத்திலும் எறும்புகள் கோதுமை விளைச்சலுக்கு 36% உதவுகின்றன.
இவை விதைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றன. அவை கொண்டு செல்லும் இடங்கள் விதைகள் வளரக்கூடிய வளமான இடமாக இருப்பது இன்னொரு அதிசயம்.

ஆனால் எறும்புகளுக்கு நாம் வீடுகளில் பொடி வைத்து சாகடிக்கிறோம். இதுவரை 12000க்கும் மேலான எறும்பு கூட்டங்கள் நம் பூமியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் அழித்துவிட்டோம். எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் அவற்றைச் சிதைத்து தவிடுபொடியாக்க வல்ல இந்த எறும்புகளால் கூட பிளாஸ்டிக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
கரையான் எனும் காப்பாளன்

நம் வீட்டில் பல பொருட்களை இவை சிதைத்திருக்கக் கூடும். அதற்காக நாம் அவற்றை வெறுத்திருக்கவும் கூடும். ஏனெனில் அவற்றிற்கு அது உங்கள் வீடு என்று தெரியாது. இவை இல்லாவிட்டால் இந்த உலகில் பில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்து நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். கழிவுகளை உலகில் இல்லாமல் ஆக்குபவை இந்தக் கரையான்கள்தான். இவைகளால் தான் இறந்தவர்கள் இந்த உலகில் ஆன்மாக்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் குப்பைகளாக இருந்திருப்பார்கள்.

 தவளை எனும் தாராளன் 


வாய் பெரிதாக உள்ள, சிரிச்ச முகமான தவளைகளைப் பெரிதாகவே நாம் மதிப்பதில்லை. அறுவறுக்கத்தக்க ஒன்றாகவே அவற்றைப் பார்க்கிறோம். பள்ளிக்கூடங்களில் உடலைக் கிழித்து சோதனை செய்வதைக் காட்டிலும், அதிகமான உதவிகளை மனிதனுக்குச் செய்கின்றன தவளைகள்.
நம் இயற்கையின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை விடுபவை இவைதான். இவற்றின் மேற்புறத்தோல், சுற்றுச்சூழலில் இருந்து துகள்களை உறிஞ்சும் வகையில் உள்ளதால்,  பெரும்பாலான மாசுக்களை அவற்றின் திசுக்களில் மூலம் உறிஞ்சிக்கொள்கின்றன.
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளைகள்தான் தண்ணீரை கெட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு, முதலில் எதிர்வினையாற்றுபவை தவளைகள். அதை வைத்துத்தான் ஆராய்ச்சியாளர்கள் சீர்கேட்டுக்கான நடவடிக்கையை எடுப்பார்கள்.

 எலி

 எலிகள் மோப்பம் பிடிப்பதில் நாய்களைப் போலவே கில்லாடிகள். ராணுவங்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, மனித குலத்துக்கான மருந்துகள் முதலில் எலிகளில்தான் சோதனை செய்யப்படுகின்றன.

 உயிர் தரும் தேனீக்கள் 

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் முதலில் பாதிக்கப்படுவது தேனீக்கள்தான். இவை நுகர்வதிலும், சுவைப்பதிலும், நிறங்களை அடையாளம் காணுவதிலும் திறமையானவை. மேலும் அவை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதிலும் புத்திசாலிகள். காற்றில் கலக்கும் விஷத்தைப் பற்றி எச்சரிக்கை கொடுப்பவை தேனீக்களே.
இந்த சிறு உயிரினங்கள் அனைத்தும், இயற்கையையும் சூழலையும் சமநிலையில் வைத்திருக்க தங்களுடைய இயல்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களாகிய நாம்தான்,  நம்முடைய இயல்பிலிருந்து விலகி வெகுதொலைவில் வந்து விட்டோம். ஆனால் இந்த உயிரினங்களையாவது நாம் விட்டுவைக்கலாம்.
புதுப்பேட்டைப் படத்தில் தனுஷ் சொல்வது போல 'இவங்களை நாம உயிரோட விட்டோம்னா, அவங்க நம்மள உயிரோட பாதுகாப்பாங்க' என்பதுதான் உண்மை. செய்வோமா?

Source - vikatan

#karthickpestcontrol

Friday 25 October 2019

நாட்டுக்கோழி குஞ்சுகளுக்கு கரையான்...!



கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த நமக்கு கரையான் கோழிகளுக்கு தீவனமாகப் பயன் படுகிறது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். கரையான் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சு களுக்கு தீனியாக கொடுத்தால் கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி இருமடங்கு அதிகரிக்கும்.

கரையான் உற்பத்தி
ஒரு பழைய பானை, கிழிந்த கோணி அல்லது சாக்கு, காய்ந்த சாணம், கந்தல் துணி மற்றும் இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள். இப்பொருட்களை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே மண் தரையில் வைத்து விட்டு மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்து விடும்.
தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லாக் கரையான்களையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 கோழிக்குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்.

அறிவியல் நுட்பம்
செம்மண் பகுதிகளில் கரையான் அதிகம் கிடைக்கும். அதிகமாக தேவையெனில் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம்.
மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுகளின் தீவனத்திற்காக உற்பத்தி செய்தார்கள்.
இத்தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான், ஆடு, மாடுகளை போல் நார்பபொருளை உண்டு வாழும் பூச்சி இனமாகும். குடலில் உள்ள நார்ப் பொருட்களை செரிக்க நுண்ணுயிர்கள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப் பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக் காளானையும் பயன்படுத்தி தொற்றுகிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான்கள் எளிதில் தாக்க ஏதுவாக அமையும்.
'இரவு' கரையான்: பொதுவாக கரையான்கள் இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலை நேரத்தில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத் திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36 சதவீதம், கொழுப்பு 44.4 சதவீதம், மொத்த எரிசக்தி 560 கலோரி/100 கிராம். சில வகை கரையான்களில் வளர்ச்சி ஊக்கி 20 சதவீதம் உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக்குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் காலம் காலமாக பயன்பட்டு வருகிறது.
இம்முறையில் கரையான்கள் வீடுகள், வீட்டு பொருட்கள் மற்றும் மரங்களை தொற்றுவதில்லை.

வாசனை ஈர்ப்பு
பானையில் இருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து இழுக்கும். ஆகவே மற்ற இடங்களை தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிகப் பிடித்து உள்ளன.
கரையான்களை பிடித்து அழிப்பதற்கு பதில் அவற்றை கோழிகள், கோழிக்குஞ்சுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் செலவில்லாமல் கோழிக்குஞ்சுகளுக்கு தீவனம் கிடைக்கிறது. வீட்டிலுள்ள பொருட்களுக்கும், மரங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

#karthickpestcontrol

Saturday 19 October 2019

கரையான் பற்றிய அறிய தகவல்.!!!!



பருவ மாற்றத்தைக் காட்டும் கரையான் புற்றுகள் கிராமப்புறங்களில், கரையான்கள் உயரமாகக் கட்டியிருக்கும் கரையான் புற்றுகளைக் காணலாம். அந்தக் கரையான் புற்றுகளைக் கொண்டு பருவ மாற்றம்,சுற்றுச்சூழல் மாற்றத்தை கணிக்கலாம் என்ற புதிய தகவலைக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.கார்னகி நிறுவனத்தின் உலக சுற்றுச்சூழலியல் துறை ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வை ஆப்பிர்க்காவின் சவான்னா புல்வெளிகளில் மேற்கொண்டனர். அவர்கள் இதற்கென்று வானில் இருந்து படமெடுப்பது, வரைபடங்களை அலசுவது போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினர். அவற்றின் மூலம், 192 சதுர மைல் பரப்பளவில் அமைந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரையான் புற்றுகள் ஆய்வு செய்யப்பட்டன.


கரையான் புற்றுகளின் அளவு, அவை ஒரு பகுதியில் அதிகமாக அல்லது குறைவக அமைந்திருக்கும் விதம் ஆகியவற்றுக்கும், வருடாந்திர மழையளவுடன் இணைந்த தாவரவியல், நில அமைப்பு ஆகியவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

 கரையான்கள் அதிக ஈரப்பதமாகவும், அதிக உலர்வாகவம் இல்லாத, எளிதாக தண்ணீர் வடியக்கூடிய பகுதியை தேர்ந்தெடுத்துத் தங்களின் புற்றுகளை அமைக்கின்றன. அப்படி சவான்னா நிலபபகுதியில் சீப்லைன்ஸ் எனப்படும் சரிவுகளில் கரயான்கள் அதிகமாகப் புற்றுகளை அமைத்திருந்தன.கரயான் புற்றுக்கும், இயற்கைச் சூழலுக்கும் நல்ல உறவு உள்ளது. மண்ணியல், நீரியல் போன்றவற்றில் மாற்றங்களைச் சுட்டிக்காட்டுபவையாக புற்றுகளை மாற்றியுள்ளது. கரையான் புற்று உள்ள இடத்தில் எந்த மாதிரியன தாவரம் வளரும், சுற்றுச்சூழலில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை எலலாம் புற்றுகள் மூலமே அறியமுடிகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.


கரையான்கள் எறும்புகளைப் போல இருந்தாலும், உண்மையில் அவை எறும்புகள் வகை அல்ல. எறும்புகள் Hymenoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. ஆனால், கரையான்கள் Isoptera என்ற வரிசையைச் சேர்ந்தது. Iso என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்று பொருள். Ptera என்றால், ‘இறக்கை ‘ என்று பொருள். அதாவது, கரையான்களின் மறுவடிவமான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்த வகைப்பாட்டியல் பெயர். கரையான்களில், உலகம் முழுதும் சுமார் 275 பேரினங்களும், சுமார் 2750 சிற்றினங்களும் உள்ளன. கரையான்களில் ஒரு சில சிற்றினங்கள், மரங்களில் வாழும். அவை மரங்களை, அரித்து தின்று விடும். மண்ணில் புற்று அமைத்து வாழும்.

கரையான்களும், தேனீக்களைப் போல ஒரு சமுதாய பூச்சி (Social insect) ஆகும். ஏன் அப்படி அழைக்கிறோம் எனில், அவற்றால் தனித்து வாழ இயலாது. ஒரு கரையான் கூட்டத்தில் இராணிக்கரையான் (Queen), மன்னர் கரையான் (King), இராணுவ வீரர்கள் (Soldiers) மற்றும் பணிக்கரையான்கள் (Workers) என நான்கு வகை இருக்கும்.

இராணுவ வீரர்களுள் இரண்டு வகை உண்டு. முதல்வகை பருத்த தலையுடன், முகத்தில் ஒரு பிரத்யேக அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். அவை Mandibulate Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது தாக்குதல் நடத்தி விரட்டிவிடும். அடுத்த வகை, Nasute Soldiers எனப்படும். இவை பகைவர்களின் மீது துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டிவிடும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விசயம், இராணுவ வீரர்கள் கண்பார்வையற்ற குருடர்கள். இராணுவ வீரர்களுள் ஆண், பெண் என இருபாலருமே உண்டு. பணிக்கரையான்களும் கண்பார்வையற்ற குருடர்களே அவற்றிலும், ஆண், பெண் என இருபாலருமே உண்டு. இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களின் வாழ்நாள் 1-2 ஆண்டுகள் ஆகும். பணிக்கரையான்கள் புற்றினைக் கட்டுதல், பழுதடைந்த புற்றினைச் சரிசெய்தல், இளம்கரையான், இராணுவ வீரர்கள், மன்னர் மற்றும் இராணி கரையான்களுக்கு உணவு கொடுத்தல் என பல வேலைகளைச் செய்யும்.


இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும். இராணுவ வீரர்கள் மற்றும் பணிக்கரையான்களுக்கு ஒரு குறிப்பிட்ட வாசனை உண்டு. ஒரு வேளை, பாதுகாப்பு பணியில் உள்ள இராணுவ வீரர்கள் பகைவர்களுடனான போரில் கணிசமாக இறந்து விட்டால், இந்த வாசனை குறைந்துவிடும். இந்த Signal கிடைத்தவுடன், இராணிக்கரையான் இராணுவ வீரர்களுக்கான முட்டைகளை வைக்கும். இப்படியாக இந்த கரையான்களுக்கு தனி இராஜியங்கள் உண்டு என்பதை அறியும்போது இந்த சின்னஞ்சிறிய கண்தெரியாத பூச்சிக்கு இத்தனைப்பெரிய ஆற்றல் என்று நினைக்குக் போது வியப்பாகவே இருக்கிறது.

 ஒரு கரையான் புற்றில், பல மில்லியன் கரையான்கள் இருக்கும். அவற்றின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை (Buoyant forces) உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று Central chimney மூலம் மேலே வரும். அப்போது புற்றின் உள்காற்றிலிருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் மற்றும் நீராவி ஆகியன Surface conduits மூலம் புற்றின் வெளிக்காற்றுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும். எனவே புத்தம் புதிய காற்று, மீண்டும் புற்றிற்க்குள் Surface conduits, Central chimney மூலம் உள்ளிழுக்கப்படும். எனவே புற்று எப்போதும் சில்லென்றே இருக்கும். எனவேதான், பாம்பு புற்றுக்கு வந்து தங்கிவிடும்.


பொதுவாக, பேப்பர் மற்றும் மரங்களில், செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி நமக்கோ, கரையான்களுக்கோ இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் Protozoa க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் Protozoa க்கள் கரையான்களுக்கு செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும். இப்படித்தான் கரையான்களுக்கு உணவு செரிக்கின்றது.

இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயம்.

#karthickpestcontrol

Thursday 17 October 2019

கொசு...!




உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே

முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.

 ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவு உட் கொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.

உடலில் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்னை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.

கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆக பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

Vitamin B --- கொசுவின் எதிரி...,இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.

#karthickpestcontrol

Saturday 12 October 2019

Termites helps in extracting clean energy from coal...!



Termites may hold the key to transforming coal a big polluting chunk of the global energy supply  into cleaner energy for the world, according to a study. The study, published in ‘Energy and Fuels’, found that a community of termite-gut microbes converts coal into methane, the chief ingredient in natural gas.

The study, which produced computer models of the step-by step biochemical process, was a collaboration between the researchers at University of Delaware and ARCTECH, a company based in Virginia, US. “It may sound crazy termite-gut microbes eating coal but think about what coal is. It is basically wood that is been cooked for 300 million years,” said Professor Prasad Dhurjati from the University of Delaware.

Termites can digest coal, releasing methane and producing humic matter, a beneficial organic fertiliser, as a byproduct.

Source: TOI

#karthickpestcontrol


‘Group of cockroaches’ found inside Chinese man’s ear...!

சீனாவில் ஒரு மனிதனின் வலது காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டார், அவர் தூங்கும் போது அதில் “கூர்மையான வலி” இரு...