Wednesday 30 October 2019

கரையான் எனும் காப்பாளன்...





 நாம் வாழும் இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த உயிரினங்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா?

எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும்,  நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன. நமக்காக வேலை செய்யும் அந்த அழகான உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாமா....

  எறும்புகள் எனும் எந்திரன்

அளவில் மிகச் சிறிய உயிர்தான், ஆனால் மிகச் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இயங்கும்.  'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட எறும்புகள்தான், இந்த மண்ணில் இருக்கும் எந்தவொரு பொருளையும் சிதைத்து மண்ணோடு கலந்து மண்ணை வளமாக்குகின்றன. இவை ஏற்படுத்தும் துளைகளால் காற்றும் நீரும் மண்ணுக்குள் சென்று, அவற்றிற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து   மண்ணின் வளத்தைக் கூட்டுகின்றன. விவசாயத்தின் இன்னொரு நண்பன் இந்த எறும்புதான். எறும்புகள் இருந்தால் உரங்களே தேவையில்லை. தண்ணீர் இல்லாத சமயத்திலும் எறும்புகள் கோதுமை விளைச்சலுக்கு 36% உதவுகின்றன.
இவை விதைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கின்றன. அவை கொண்டு செல்லும் இடங்கள் விதைகள் வளரக்கூடிய வளமான இடமாக இருப்பது இன்னொரு அதிசயம்.

ஆனால் எறும்புகளுக்கு நாம் வீடுகளில் பொடி வைத்து சாகடிக்கிறோம். இதுவரை 12000க்கும் மேலான எறும்பு கூட்டங்கள் நம் பூமியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் அழித்துவிட்டோம். எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் அவற்றைச் சிதைத்து தவிடுபொடியாக்க வல்ல இந்த எறும்புகளால் கூட பிளாஸ்டிக்கை ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
கரையான் எனும் காப்பாளன்

நம் வீட்டில் பல பொருட்களை இவை சிதைத்திருக்கக் கூடும். அதற்காக நாம் அவற்றை வெறுத்திருக்கவும் கூடும். ஏனெனில் அவற்றிற்கு அது உங்கள் வீடு என்று தெரியாது. இவை இல்லாவிட்டால் இந்த உலகில் பில்லியன் டாலர் கணக்கில் செலவு செய்து நாம் சில வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். கழிவுகளை உலகில் இல்லாமல் ஆக்குபவை இந்தக் கரையான்கள்தான். இவைகளால் தான் இறந்தவர்கள் இந்த உலகில் ஆன்மாக்களாக இருக்கிறார்கள். இல்லையென்றால் குப்பைகளாக இருந்திருப்பார்கள்.

 தவளை எனும் தாராளன் 


வாய் பெரிதாக உள்ள, சிரிச்ச முகமான தவளைகளைப் பெரிதாகவே நாம் மதிப்பதில்லை. அறுவறுக்கத்தக்க ஒன்றாகவே அவற்றைப் பார்க்கிறோம். பள்ளிக்கூடங்களில் உடலைக் கிழித்து சோதனை செய்வதைக் காட்டிலும், அதிகமான உதவிகளை மனிதனுக்குச் செய்கின்றன தவளைகள்.
நம் இயற்கையின் ஆரோக்கியத்தைப் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை விடுபவை இவைதான். இவற்றின் மேற்புறத்தோல், சுற்றுச்சூழலில் இருந்து துகள்களை உறிஞ்சும் வகையில் உள்ளதால்,  பெரும்பாலான மாசுக்களை அவற்றின் திசுக்களில் மூலம் உறிஞ்சிக்கொள்கின்றன.
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளைகள்தான் தண்ணீரை கெட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு, முதலில் எதிர்வினையாற்றுபவை தவளைகள். அதை வைத்துத்தான் ஆராய்ச்சியாளர்கள் சீர்கேட்டுக்கான நடவடிக்கையை எடுப்பார்கள்.

 எலி

 எலிகள் மோப்பம் பிடிப்பதில் நாய்களைப் போலவே கில்லாடிகள். ராணுவங்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, மனித குலத்துக்கான மருந்துகள் முதலில் எலிகளில்தான் சோதனை செய்யப்படுகின்றன.

 உயிர் தரும் தேனீக்கள் 

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் முதலில் பாதிக்கப்படுவது தேனீக்கள்தான். இவை நுகர்வதிலும், சுவைப்பதிலும், நிறங்களை அடையாளம் காணுவதிலும் திறமையானவை. மேலும் அவை தகவல்களைப் பகிர்ந்துகொள்வதிலும் புத்திசாலிகள். காற்றில் கலக்கும் விஷத்தைப் பற்றி எச்சரிக்கை கொடுப்பவை தேனீக்களே.
இந்த சிறு உயிரினங்கள் அனைத்தும், இயற்கையையும் சூழலையும் சமநிலையில் வைத்திருக்க தங்களுடைய இயல்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதர்களாகிய நாம்தான்,  நம்முடைய இயல்பிலிருந்து விலகி வெகுதொலைவில் வந்து விட்டோம். ஆனால் இந்த உயிரினங்களையாவது நாம் விட்டுவைக்கலாம்.
புதுப்பேட்டைப் படத்தில் தனுஷ் சொல்வது போல 'இவங்களை நாம உயிரோட விட்டோம்னா, அவங்க நம்மள உயிரோட பாதுகாப்பாங்க' என்பதுதான் உண்மை. செய்வோமா?

Source - vikatan

#karthickpestcontrol

1 comment:

Thank you

‘Group of cockroaches’ found inside Chinese man’s ear...!

சீனாவில் ஒரு மனிதனின் வலது காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டார், அவர் தூங்கும் போது அதில் “கூர்மையான வலி” இரு...